அறிமுகம்

சிறந்த, உயர்தர மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அறிவியல்சார் அரச  அமைப்பான அரச மருந்தாக்கல்  உற்பத்தி கூட்டுத்தாபனமான (SPMC) நாம்,  இலங்கையர்களுக்கு பொருளாதார ரீதியாக பொருந்தக்கூடிய விலையில், தனித்துவமான, உயர்தர மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள வழி வகுக்கின்றோம்.

 

மருந்துகளுக்கான உலக சுகாதார தாபனத்தின் நியமங்கள் மற்றும் தரநிலைகள் உட்பட சர்வதேச தரத்திற்கு இணையாக எமது மருந்துப் பொருட்கள்  நவீன தொழிநுட்பவசதிகளுடன், சிறந்த உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஆய்வகங்களில் சிறந்த தர மேற்பார்வையின் கீழான உற்பத்தி வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.  

 

நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள், ஆராய்ச்சிக் கலாச்சாரம் மற்றும் சிறந்த ஜப்பானிய தொழில்நுட்பத்துடனான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கீர்த்தி மீதான முதலீட்டுடன் எமது வெளியீட்டின்மூலம்  உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டிற்குமான  சிறந்த தரம்வாய்ந்த, காலத்திற்குசிதமான  மருந்துப் பொருட்களை மட்டுமே வழங்குவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.

 

இன்று அ.ம.உ.கூ. மிக உயர்ந்த அடைவுகளை தொடர்வதற்கு  நிலையாக கால்பதித்துள்ளதோடு உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி  உள்ளிட்ட  எமது பல்தரப்பு திணைக்களங்களின், மென்மையான பொறிமுறை இணைப்பு என்பவற்றில் தலைநிமிர்ந்து இருப்பது  மிக முக்கியமானதாகும். எமது  ஒவ்வொரு திணைக்களத்தினதும் மற்றும்  ஒவ்வொரு பணியாளரதும்  அர்ப்பணிப்பே  எமது வெற்றிக்கான சக்கரங்களும் சில்லுகளுமாகும். இது  மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

அன்றும் இன்றும் நாம் சுமந்துள்ள மிகமுக்கிய முன்னுரிமையும் பொறுப்பும் யாதெனில் பல தலைமுறைகளாக மனித வாழ்க்கையை சிறப்பாகவும் நீண்ட ஆயுள்காலமுடையதாகவும்  மாற்றுவதாகும். அதில் நாங்கள் சிறந்து விளங்குகின்றோம்.!

SPMC பற்றி

அரச மருந்தாக்கல்  உற்பத்தி கூட்டுத்தாபனமான  நாம், 33 வருட கால எமது அனுபவப் பிணைப்புடன்   இலங்கையில் மருந்துப் பொருட்களை  உற்பத்திசெய்வதில் கீர்த்திமிக்க, தனிச்சிறப்புவாய்ந்த ஒரு கலங்கரை விளக்காக உள்ளோம்.

 

அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனமானது  1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரச கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையினூடாக  ஜப்பானிய அரசாங்கத்தின் மானிய உதவியினூடாக 1987 இல் ஜூன், மாதத்தில்  தாபிக்கப்பட்டது. அன்றிலிருந்து, அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனமானது  உயர் தரத்திலான, பயனுறுதிமிக்க மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான அதன் கடப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. இவை சிக்கனமான, உகந்ததான விலையில் பெறத்தக்க  உள்ளூர்  மற்றும் சர்வதேச தராதரங்களுடன் இயைந்ததாக  உள்ளன. ஆரம்பத்திலிருந்தே, அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனமானது  இலங்கையில் மருந்துபொருட்களின் உற்பத்தியின் தனிச்சிறப்பு மிக்க நிறுவனமாக வளர்ந்து, இலங்கையில் மருந்து உற்பத்தி செய்யும் ஒரே அரச துறை நிறுவனமாக மருந்தக கைத்தொழிலில்   முன்னணி நிலையில் உள்ளது.

 

மருத்துவ மருந்துப் பொருட்களின் சிறந்த  தரத்தை பேணுவதே எமது மிகப்பெரிய  முன்னுரிமையாக இருப்பதோடு  அதை அடைய, சர்வதேசரீதியாக எதிர்பார்க்கப்படும் சிறந்த தராதரங்களிற்கு இணையாக எங்கள் உற்பத்தித் திறனை நாங்கள் அமைத்துள்ளோம். அரச மருந்தாக்கல்  உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால்  தயாரிக்கப்படும் அனைத்து மருந்து தயாரிப்புகளும் பிரித்தானிய மருந்தக மருந்துகள் (BP), ஐக்கிய அமெரிக்க மருந்தக மருந்துகள் (USP) ஆகியவற்றுடன் இணைந்த  தராதரங்களையும் மற்றும் SPMC இன் சொந்த  தரநிலைகளுக்கு ஏற்புடையதாகவுமுள்ளன.

 

அரச மருந்தாக்கல்  உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் உற்பத்தி வசதிகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) தற்போதைய நல்ல உற்பத்தி நடைமுறை (cGMP) தேவைகளுக்கு ஏற்ப மிக சுத்தமான சூழ்நிலையை பேணிவருகின்றது. உற்பத்தி வலயங்களின் சூழல் முறைமையானது  வெப்பநிலை, ஈரப்பதன், நுண்ணுயிர் கணிப்பு மற்றும் தொடர்  துகள்களை விடயம்  என்பவற்றினால் கண்காணிக்கப்பட்டு கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. அரச மருந்தாக்கல்  உற்பத்தி கூட்டுத்தாபனமானது  ஆரம்பத்தில் 50,000 சதுர அடியில் தனது செயற்பாட்டை தொடங்கியதோடு பின்னைய ஆண்டுகளில் அது இரண்டு தனியான உற்பத்தி வலயங்களுடன் 75,000 சதுர அடி வரை விரிவாக்கப்பட்டதோடு  நவீன ஜப்பானிய மற்றும் ஜேர்மன் இயந்திரசாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.

 

1987 ஆம் ஆண்டில் அரச மருந்தாக்கல்  உற்பத்தி கூட்டுத்தாபனம்  தொடங்கப்பட்டதிலிருந்து, சிறந்த தரத்திலான உற்பத்தி மற்றும்  குழுக்களுக்கிடையிலான சமத்துவம் தொடர்பில் ஜப்பானிய பணி நெறிமுறைகள் மற்றும் கலாசாரம் என்பன கூட்டுத்தாபனத்தினுள்  ஓரளவு கட்டியெழுப்பட்டிருக்கின்றது. உயர் தரத்திலான மருந்து தயாரிப்புகளின் உற்பத்தியாளர் ஒருவராக இணையற்ற நற்பெயரை கட்டியெழுப்புவதில் அடிப்படையாக விளங்குகின்ற தனிச்சிறப்புமிக்க  குழு உணர்வு மற்றும் அதிவிசேடமான குழுப்பணி கொண்ட ஒரு நிறுவனம் இன்று எம்மிடம் உள்ளது. அந்தப் புகழ் SPMC யின் கீர்த்திமிக்க 33 வருட சேவைக்குப் பின்னால் உள்ள  மிகவினைத்திறனுள்ள சக்தியாக தொடர்ந்தும் விளங்கிவருகின்றது.